For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’பீரோவுக்கு பின்னாடி யாரு’..? ’என் ’பொண்டாட்டி கூட நீ என்னடா செய்ற’..? நண்பன் அடித்துக் கொலை..!!

01:31 PM May 14, 2024 IST | Chella
’பீரோவுக்கு பின்னாடி யாரு’    ’என் ’பொண்டாட்டி கூட நீ என்னடா செய்ற’    நண்பன் அடித்துக் கொலை
Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அருகே குண்டுரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 32). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் (35) என்பவரும் நண்பர்கள் என சொல்லப்படுகிறது. இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதும், ஒன்றாக மது அருந்துவதுமாக இருந்துள்ளனர். இதற்கிடையே காளிதாஸ் மனைவி ரேவதிக்கும், சரவணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த காளிதாஸ் சரவணனை பலமுறை எச்சரித்துள்ளார். இதனால் இவர்களின் நட்பு பிரிந்துள்ளது.

Advertisement

இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் சரவணன், ரேவதி இருவரும் வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது, காளிதாஸ் ஓசூரில் இருந்து முன் அறிவிப்பின்றி திடீரென வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது காளிதாஸ் வருவதை அறிந்த சரவணன், பீரோவின் பின்புறத்தில் மறைந்துள்ளார். மேலும், ரேவதியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காளிதாஸ், வீட்டை முழுவதும் சுற்றிப் பார்த்தபோது சரவணன் இருப்பதை கண்டு பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், கையில் கிடைத்த கரண்டி மற்றும் பாட்டில்களால் சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில், அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, சரவணனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து குரிசிலாப்பட்டு போலீசார், காளிதாசை கைது செய்தனர். நண்பன் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் நண்பனே கொலை செய்யும் அளவிற்கு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : தீவிரமடைந்த கோடை மழை..!! 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Advertisement