For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எப்போ பார்த்தாலும் ரீல்ஸ் தானா..? இன்ஸ்டாவில் மூழ்கி கிடந்த மனைவி..!! அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்..!!

Enraged husband Kiran slashes Jayashree with a sickle. He was badly injured and fell down miserably.
04:49 PM Aug 24, 2024 IST | Chella
எப்போ பார்த்தாலும் ரீல்ஸ் தானா    இன்ஸ்டாவில் மூழ்கி கிடந்த மனைவி     அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்
Advertisement

கர்நாடக மாநிலம் உடுப்பி பிரம்மவர்சாலி கிராமத்தில் வசிப்பவர்கள் கிரண் உபாத்யா (30), ஜெயஸ்ரீ (28) தம்பதி. இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே, ரீல்ஸ் மோகத்தில் இருந்த ஜெயஸ்ரீ, இன்ஸ்டாகிராமில் எப்போதுமே மூழ்கி கிடப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

இதையடுத்து, நேற்றும் கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பின், இருவரும் தூங்கச் சென்றனர். இதைத்தொடர்ந்து அதிகாலையில் ஜெயஸ்ரீ மீண்டும் செல்போனில் முழ்கி கிடந்த நிலையில், தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவர் கிரண், அரிவாளால் ஜெயஸ்ரீயை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயரிழந்தார்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டா போலீசார், ஜெயஸ்ரீயின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கிரணை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : வாழை, கொட்டுக்காளி திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..? அடேங்கப்பா இத்தனை கோடியா..?

Tags :
Advertisement