முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்களை சுற்றி பொறாமை பிடிச்சவங்களா இருக்காங்களா.? கட்டாயம் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்.!

05:37 AM Dec 20, 2023 IST | 1newsnationuser4
Advertisement

உலகமானது நேர்மறை மற்றும் எதிர்மறை சிந்தனைகளாலும் ஆற்றலாலும் சூழபட்டிருக்கிறது. பொறாமை என்பது மனித குளத்தின் இயல்பிலேயே இருக்கக்கூடிய ஒரு தீய எண்ணம் ஆகும். கண் திருஷ்டிகளும் பொறாமையின் ஒரு பகுதி தான் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தக் கண் திருஷ்டி பொறாமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வது நமது முன்னேற்றத்திற்கும் அமைதியான வாழ்விற்கும் வழிவகுக்கும். இதுபோன்ற கெட்ட எண்ணங்கள் மற்றும் பார்வைகளில் இருந்து உன்னை காத்துக் கொள்வதற்கு சில எளிய வழிகள் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவை என்ன.? என்று இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

நமக்கு பிடிக்காத நபரை சந்திக்க நேர்ந்தால் வீட்டிற்கு வந்தவுடன் கைகளில் உப்பை தேய்த்து தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த நபரிடமிருக்கும் கெட்ட எண்ணங்கள் மற்றும் எதிர்மறை சிந்தனைகளும் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்தாமல் அழிந்து விடும். மேலும் அந்த நபரின் கண் திருஷ்டி மற்றும் பொறாமையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்று கிராம்பை எப்போதும் கைகளில் அல்லது கைப்பைகளில் வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத நபர்கள் மற்றும் எதிர்மறை சிந்தனை கொண்ட நபர்களிடமிருந்து நமக்கு வர இருக்கும் எதிர்மறை எண்ணங்களையும் தீய சக்திகளையும் தடுக்கின்ற சக்தி கிராம்பிற்கு இருக்கிறது.

மேலும் பிரிஞ்சி இலையை வீட்டில் எரிப்பதன் மூலம் பண வரவு மற்றும் வெற்றி தேடி வரும் என மாந்திரீகங்கள் தெரிவிக்கின்றன. அந்த இலையின் நறுமணத்திற்கும் அவற்றின் புகைக்கும் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கி செல்வ வளம் பெருகுவதோடு வெற்றியும் குடிகொள்ளும் என்று மாந்திரீக தந்திரங்களில் இருப்பதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற சிறிய விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் எதிர்மறை சிந்தனைகள் மற்றும் பொறாமையில் இருந்து நம்மை காத்துக் கொள்வதோடு வெற்றி மற்றும் செல்வ வளத்தோடு இருக்கலாம்.

Tags :
Evil eyeJealouslife styleNegative PeopleRemedy
Advertisement
Next Article