பரபரப்பு...! TASMAC கடைய எப்ப மூட போறீங்க...? உதயநிதியை சுற்றி வளைத்த பெண்கள்...!
டாஸ்மார்க் கடைகளை எப்பொழுது மூடுவீர்கள் என பெண்கள் அமைச்சர் உதயநிதி இடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காஞ்சிபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடும் நிதி நெருக்கடியின்போது திமுக ஆட்சிக்கு வந்தது. கொரோனா தடுப்பூசி குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின். இலவச பஸ் திட்டத்தால், பல பெண்கள் பயன் பெற்றுள்ளனர். மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட பெண்களுக்கு, 3 மாதங்களுக்குள் வழங்கப்படும். மத்திய அரசு நீட்டிய அனைத்து இடங்களிலும் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டது என்றார்.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்தபோது, கூட்டத்தில் இருந்த பெண்கள் தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளை எப்பொழுது மூடப் போகிறீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி 2019 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தார்.
ஆனால் நீங்கள் அவருக்கு ஓட்டு போட்டீங்களா..? அதிமுகவிற்கு தானே ஓட்டு போட்டீங்க என கேள்வி எழுப்பினார். மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிப் போன அமைச்சர் உதயநிதி பாஜக தமிழகத்திற்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார். இப்படி செல்லும் இடமெல்லாம் திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருவது அக்கச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.