For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’என்ன விட்ருடா’..!! காரில் வைத்து ஜூனியர் மாணவியை கதறவிட்ட ஒருதலை காதலன்..!!

The incident of rape of a junior student in a car has caused great shock.
04:59 PM Aug 14, 2024 IST | Chella
’என்ன விட்ருடா’     காரில் வைத்து ஜூனியர் மாணவியை கதறவிட்ட ஒருதலை காதலன்
Advertisement

காரில் வைத்து ஜூனியர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் தனியாருக்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் காசிப்பூரை சேர்ந்த சிவாங்க் சிங் என்பவர் படித்து வரும் நிலையில், இவருக்கும் அதே கல்லூரியில் படித்து வரும் ஜூனியர் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த மாணவி மீது சிவாங்க் சிங்கிற்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், தனது காதலை சொன்னால், மாணவி விட்டுச் சென்றுவிடுவாரோ என நினைத்து காதலை அவரிடம் வெளிப்படுத்தாமலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் தான், கடந்த 10ஆம் தேதி மாலையில் சிவாங்க் சிங், மாணவிக்கு போன் செய்து ''உன்னை சந்திக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியும் அவரை சந்திக்கச் சென்றுள்ளார். பின்னர், சிக்கந்திரா பகுதியில் நடந்த சந்திப்பின்போது மாணவியை சிவாங்க் சிங் கட்டாயப்படுத்தி தனது காரில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார். காரை மற்றொருவர் ஓட்டிச் செல்ல அந்த மாணவியுடன் பின் இருக்கையில், சிவாங்க் சிங் அமர்ந்துள்ளார். அப்போது, எங்கு செல்கிறோம்? என்று மாணவி கேட்டபோது சிவாங்க் சிங் எந்த பதிலும் கூறவில்லை.

இதனால் மாணவிக்கு பயம் வந்துள்ளது. இதையடுத்து, தன்னை காரில் இருந்து இறக்கிவிடும்படி கூறியுள்ளார். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் மாணவி கோபமடைந்துள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த சிவாங்க் சிங் மாணவியின் கையை காரின் இருக்கையுடன் சேர்த்து கட்டியுள்ளார். மேலும், காரில் இருந்த திரையை எடுத்து காரின் உட்புறத்தில் உள்ள பின் இருக்கையை சுற்றி கட்டியுள்ளார். கார் ஓட்டுபவர் மற்றும் வெளியே இருந்து பார்ப்போருக்கு காரின் பின் இருக்கையில் என்ன நடக்கிறது? என்பது கூட தெரியாது.

இதனால், ஏதோ தவறு நடக்கப் போவதை அறிந்த மாணவி அலறியுள்ளார். ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், அந்த மாணவியை மிரட்டி காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு மாணவியை சாலையேராம் தள்ளிவிட்டுவிட்டு சிவாங்க் சிங் அதே காரில் சென்றார். இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரளித்தார். இந்த புகாரை அடுத்து, போலீசார் சிவாங்க் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, சிவாங்க் சிங் தலைமைறவானார். அவரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆக்ராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

Read More : ’உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி’..? ’பாஜகவால் அது முடியவே முடியாது’..!! கனிமொழி எம்பி பரபரப்பு பேட்டி..!!

Tags :
Advertisement