முக.ஸ்டாலினுக்கு எள்ளு எது? கொள்ளு எது? என்பதே தெரியாது..!! எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பிரச்சாரம்..!!
தேனி பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த பிரச்சார கூட்டத்தினால் தேனி நகரமே குழுங்குகிறது. இங்கு போட்டியிடும் வேட்பாளர் நாராயணசாமி மிகவும் எளிமையானவர். மக்களோடு மக்களாக இருப்பவர் தான் நம் வேட்பாளர். திமுக வேட்பாளர் எந்த கட்சியில் இருந்து வந்தவர். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இங்கு போட்டியிட்டு போனவர். இப்போது ஏன் வந்துள்ளார். டிடிவி தினகரன் 14 ஆண்டு காலம் எங்கு போனார் என்று தெரியவில்லை. மேலும், டிடிவி தினகரன் பாஜகவை எவ்வாறு விமர்சித்தார் என்று பாஜக நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி என டிடிவி தினகரன் பேசும் பழைய வீடியோவை வாக்காளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
”14 ஆண்டுகள் மக்களை பார்க்காத தினகரனுக்கு, எப்படி ஓட்டுபோட முடியும். அவரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். விண்ணை முட்டும் அளவுக்கு இன்றைய தினம் விலைவாசி உயர்ந்துள்ளது. மீண்டும் அதிமுக அரசு அமைந்ததும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்தது ஸ்டாலின் அரசின் சாதனை. நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வெற்றி பெற்றவர் ஸ்டாலின்.
ஆடு மாடு கோழி வளர்ப்பு எல்லாம் விவசாய உப தொழில்கள். அதையெல்லாம் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கியதை நிறுத்தியவர் ஸ்டாலின். விவசாயிகளை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும். ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வராக இருக்கிறார். எள்ளு எது? கொள்ளு எது? எனத் தெரியாத முதல்வர். அவரிடம் பத்து வகை தானியங்களைக் காட்டி ஒவ்வொன்றும் என்ன தானியங்கள் என்று கேட்டுப் பாருங்கள் தெரியாது. விவசாயத்தை பற்றி தெரியாததால் தான் அதையெல்லாம் நிறுத்தியுள்ளார்” என்றார்.
Read More : ஜியோ பயனர்களுக்கு செம ஆஃபர்..!! 14 ஓடிடி தளங்கள் இலவசம்..!! உடனே ரீசார்ஜ் பண்ணுங்க..!!