For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"எனது குழந்தை செய்த தவறு என்ன.?" தற்கொலை செய்து கொண்ட 16 வயது இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் தாய்… கண்ணீர் பேட்டி.!

12:31 PM Nov 26, 2023 IST | 1newsnationuser4
 எனது குழந்தை செய்த தவறு என்ன    தற்கொலை செய்து கொண்ட 16 வயது இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் தாய்… கண்ணீர் பேட்டி
Advertisement

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரை சேர்ந்த 16 வயதை இன்ஸ்டாகிராம் பிரபலம் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக கேலி குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரை சேர்ந்தவர் 16 வயதான ப்ரன்ஷு. இவர் எல்ஜிபிடிக்யூ சமூகத்தைச் சேர்ந்தவர். தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தின் மூலம் தன்னுடைய மேக்கப் கலையை பயன்படுத்தி பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இன்ஃப்ளுயன்சராக இருந்தவர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலை அணிந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலவிதமான கேள்விகளுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளானது. நாலாயிரத்துக்கும் அதிகமான பதிவர்கள் இவரது வீடியோவிற்கு ஆபாசமாக மற்றும் அருவருக்கத் தக்க பின்னூட்டங்களை பகிர்ந்து இருந்தனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பலரும் சமூக கிண்டல்களுக்கு எதிராக தங்களது கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர்.

இந்நிலையில் அவரது தாய் உருக்கமான பேட்டி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவரது தாய் "என்னுடைய குழந்தை என்ன தவறு செய்தது.?, தவறு எதுவும் செய்யவில்லை. தீபாவளி அன்று நமது கலாச்சார உடையான சேலையை அணிந்து தான் வீடியோ பகிர்ந்து இருந்தார். அவள் மிகவும் திறமையானவள். எந்தவிதமான ஆபாசமும் இல்லாமல் வீடியோ பதிவு செய்திருந்தார். அதில் என்ன தவறு இருந்தது. அதற்காக இவ்வளவு ஆபாச அர்ச்சனைகள் செய்து எனது குழந்தையை கொன்று விட்டனர்" என உருக்கமாக பேசியிருக்கிறார்.

Tags :
Advertisement