சென்னையில் களைகட்டும் பூனை பிரியாணி..!! இரவில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!
சென்னை எழும்பூரை சேர்ந்த ஜோஷ்வா என்ற விலங்கு நல ஆர்வலர் பகீர் குற்றசாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளித்து வரும் இவரின் வீட்டின் அருகே நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் வந்து தெருவில் இருக்கும் பூனைகளை பிடித்து மூட்டையில் கட்டிக்கொண்டு சென்றதாக கூறியுள்ளார்.
மேலும், அவரை விரட்டி பிடித்து விசாரித்தபோது 100 ரூபாய் கொடுத்தால் பூனையை தருகிறேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர் ஒருவர் மட்டும் சாப்பிடுவார் என்றால், ஒரு பூனை போதும் எதற்கு இத்தனை பூனையை பிடிக்க வேண்டும்? இதனை உணவகங்களில் விற்று பணம் சம்பாதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே சென்னையில் அயனாவரம், சவுக்கார்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் குறைவான விலைகளுக்கு பூனை இறைச்சியை நரிக்குறவர்கள் விற்று வருவதாகவும், குறிப்பாக வீடுகளில் பிடிக்கப்படும் பூனைகளை வாரச்சந்தையில் அதிக அளவில் விற்று வந்ததும் தெரியவந்தது. இது பிரியாணி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : குழந்தைகளை தூங்க வைக்க ஏசி பயன்படுத்துறீங்களா..? பெற்றோர்களே இதை மறந்துறாதீங்க..!!