முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வயநாடு நிலச்சரிவு..!! ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா..!!

Actor Surya, actor Karthi and actress Jyothika have donated Rs 50 lakh to the Kerala Chief Minister's Relief Fund for Kerala landslide relief work.
03:14 PM Aug 01, 2024 IST | Chella
Advertisement

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு கேரளாவுக்கு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர்.

Advertisement

அதே போல் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தான், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய மூவரும் கேரளா நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக ரூ.50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். மேலும் பலரும், கேரளாவுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

Read More : ஒருநாளைக்கு எத்தனை முறை காஃபி குடிக்கிறீங்க..? கல்லீரலுக்கு ஆபத்தா..? உண்மை இதுதான்..!!

Tags :
கார்த்திகேரளாநடிகர் சூர்யாவயநாடுஜோதிகா
Advertisement
Next Article