For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எச்சரிக்கை!. எடப்பாடி பகுதிகளில் பிடிபடாத சிறுத்தை!. ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணி தீவிரம்!

Warning! Uncaught leopard in Edappadi areas! The task of searching with a drone camera is intense!
08:00 AM Jul 14, 2024 IST | Kokila
எச்சரிக்கை   எடப்பாடி பகுதிகளில் பிடிபடாத சிறுத்தை   ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணி தீவிரம்
Advertisement

Leopard: சேலம் எடப்பாடி அருகே சிறுத்தை பிடிப்படாததால் ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணியில் வனத்துறையின் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

Advertisement

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு, கோம்பைக்காடு பகுதியில் மாதையன் என்பவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். தினசரி காலை மேய்ச்சலுக்கு கால்நடைகளை அனுப்பி பின்னர் மாலை வீட்டின் அருகில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாடுகளை கட்டி வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். நேற்று காலை மாதையன் எழுந்து பார்த்தபோது ஒரு மாடு காணாமல் போனதை கவனித்தார். உடனடியாக அருகில் தேடிய போது மாட்டை மர்ம விலங்கு வேட்டையாடியது தெரிய வந்தது.

உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து வந்த வனத்துறையினர் மாதையன் வீட்டின் அருகில் கேமராவை பொருத்திச் சென்றனர். மேலும் அங்கு ஒரு கூண்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வனத்துறையினர் வைக்கப்பட்ட கேமராவை ஆய்வு செய்தபோது சிறுத்தை அதே இடத்திற்கு மீண்டும் வந்தது தெரியவந்தது. இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் கோம்பைக்காடு பகுதியில் பல இடங்களில் கேமரா மற்றும் கூண்டுகளை அமைத்துள்ளனர். சிறுத்தை மீண்டும் வேட்டைக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிறுத்தையின் கால் தடத்தை வைத்து வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், கோம்பைக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம், குழந்தைகளை வனப் பகுதி ஒட்டி உள்ள இடங்களுக்கு அனுப்ப வேண்டாம் உள்ளிட்டவைகளை வனத்துறையினர் கூறி வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாக சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்து சிறுத்தையை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது எடப்பாடியிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் மேட்டூரில் நடமாடிய சிறுத்தை எடப்பாடி வந்துள்ளதா? அல்லது எடப்பாடியில் புதிய சிறுத்தை நடமாடி வருகிறதா என்று வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேட்டூரில் நடமாடிய சிறுத்தை எடப்பாடிக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தநிலையில், பக்கநாடு, கோம்பைக்காடு, ஓடுவங்காடு ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வனத்துறையினர் நேற்று முன் தினம் முதல் கேமரா அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.13 கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இன்று ட்ரோன் மூலம் கேமராக்களை பறக்கவிட்டு சிறுத்தை இருக்கும் இடத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Readmore: Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை…!

Tags :
Advertisement