For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எச்சரிக்கை!. அரிசியை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்தும்!. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Be Cautious! Eating Rice May Increase Cancer Risk, Shocking New Findings
06:01 AM Sep 20, 2024 IST | Kokila
எச்சரிக்கை   அரிசியை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்தும்   புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Advertisement

Rice: இந்திய உணவு வகைகளில் முக்கிய பங்கி வகிப்பது அரிசி. இது நாட்டின் முக்கிய உணவாக கருதப்படுகிறது. மேலும் தென்னிந்திய உணவுகளில் அரிசியே பிரதான உணவாக இருக்கிறது. பெரும்பாலும் அரிசியில் பல வகைகள் உள்ளன. அரிசியை வேகவைத்து சாப்பிடும் போது அதில் உள்ள சத்துக்கள் நமக்கு எளிதில் கிடைக்கும். இருப்பினும் கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதால், இதனை மிதமான அளவில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதனை சமைப்பது மிக எளிது.

Advertisement

ஆனால் அரிசியை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஆய்வின்படி, அரிசியை சரியாக சமைக்காமல் சாப்பிட்டால் அது உங்களில் புற்றுநோயை கூட ஏற்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இன்றைய உலகில், எந்த உணவும் முற்றிலும் தூய்மையானது அல்ல; இரசாயனங்கள் அடிக்கடி கலக்கப்படுகின்றன, இது கடுமையான உடல்நல அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக பெல்ஃபாஸ்டினின் சமீபத்திய ஆய்வின்படி, தொழில்துறை நச்சுகள் மற்றும் மண்ணில் உள்ள பூச்சிக்கொல்லிகளிலிருந்து வரும் ரசாயனம் அரிசியை ஆபத்தானதாகவும், நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றுகின்றன. இது பல சந்தர்ப்பங்களில் ஆர்சனிக் விஷத்திற்கு கூட வழிவகுக்கும். அரிசி புற்றுநோய் உருவாகும் ஆபத்தை ஊக்குவிக்கிறது என்று கூறும் ஆய்வுகள் இதுமட்டுமல்ல, பல ஆய்வுகள் இதுபோல இருக்கின்றன. அதன்படி வெளியான மற்றொரு ஆய்வில், மார்பக மற்றும் பிற புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகளை அடையாளம் காண 90-களின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட கலிபோர்னியா ஆசிரியர்கள் ஆய்வில் பல பெண்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களிடையே, பின்தொடர்தலின் போது மொத்தம் 9,400 பங்கேற்பாளர்கள் புற்றுநோய் பாதிப்பை பெற்றிருந்தனர். அதில் மார்பக மற்றும் நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.

ஆர்சனிக் என்பது பல்வேறு தாதுக்களில் உள்ள ஒரு இரசாயனமாகும். இது தொழில்துறை பூச்சிக்கொல்லிகள் மற்றும் சாதாரண பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது. சில நாடுகளில் நிலத்தடி நீரில் ஆர்சனிக் அளவு அதிகமாக உள்ளது. உணவு அல்லது தண்ணீரின் மூலம் நாம் நீண்ட காலத்திற்கு இந்த இரசாயனத்தை தெரியாமலேயே உட்கொள்ளும்போது, அது ஆர்சனிக் விஷத்திற்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக ஒருவருக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் புற்றுநோய் கூட ஏற்படலாம். ஆய்வின்படி, அரிசியில் அதிக அளவு ஆர்சனிக் உள்ளது. எனவே, அரிசியை சரியாக சமைக்காவிட்டால், அது எதிர்காலத்தில் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

ஆய்வின்படி, அரிசியிலிருந்து ஆர்சனிக் ரசாயனத்தை அகற்றுவதற்கான சிறந்த வழி, சமைப்பதற்கு முன் ஒரு இரவு முழுவதும் அதனை தண்ணீரில் ஊறவைப்பது தான் என்றில்லை தெரிவித்துள்ளது. இந்த செயல்முறைக்குப் பிறகு, நச்சுகளின் அளவு 80 சதவிகிதம் குறைக்கப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: குட்நியூஸ்!. இலவச ரேஷன் பெறுபவர்களுக்கான புதிய விதிகள்!. அக்.31-ம் தேதி வரை நீட்டிப்பு!. மத்திய அரசு அதிரடி!

Tags :
Advertisement