முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்கள் வீட்டில் தரித்திரம் நீங்க வேண்டுமா? அப்போ இந்த காியங்களை எல்லாம் செய்யுங்க!!

05:50 AM Jun 04, 2024 IST | Baskar
Advertisement

என்ன மாதிரியான விஷயங்களை செய்தால் வீட்டில் தரித்திரம் விலகி செல்வம் பெருகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

செவ்வாய், வெள்ளி:

செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வீட்டை துடைக்கவே கூடாது. பிற நாட்களில் சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்யும் தண்ணீரில் கைப்பிடி கல்உப்பு கலந்து துடைத்தால் உங்கள் வீட்டில் விழுந்த கண் திருஷ்டி மறையும். வீட்டு பூஜை அறையில் இரண்டு விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். கிழக்கு முகமாக குத்துவிளக்கும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருப்பது அவசியம். வீட்டு பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றும் போது இரண்டு திரிகள் போட்டு ஏற்ற வேண்டும். இதனால் வீட்டிற்கு செல்வம் வந்து சேரும்.

பூஜை அறையிவ் தூபம்:

சோம்பு, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் ஆகியவை மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு கொள்ளுங்கள். இந்த மூட்டையை குபேர மூலையில் வைத்துவிடுங்கள். தினமும் பூஜை முடிந்து இங்கு தூபம் காட்டினால் வீட்டில் எப்போதும் பணம் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் இருக்கும் பணப்பெட்டியை/ பீரோவை தென்மேற்கு திசையில் கிழக்கு நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். இந்த திசையில் வைக்க முடியாதவர்கள் வடக்கு பார்த்து வைக்கலாம். வடமேற்கு திசையில் கிழக்கை நோக்கி வைத்தாலும் பணம் சேரும்.

வெறும் கையால் பொருட்கள் கொடுக்கக் கூடாது:

அன்னம், உப்பு, நெய் ஆகியவற்றை வெறும் கையால் கொடுக்கக் கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் பிடிக்கும். இரவிலும், வீட்டில் பூஜை முடித்ததும் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது. இதனால் வீட்டில் மகாலட்சுமி தங்காமல் போய்விடுவார். வீட்டை சுத்தம் செய்து, அந்த குப்பைகளை வீட்டு மூலை முடுக்குகளில் வைக்கக் கூடாது. இதனாலும் தரித்திரம் வரும்
மேலும் பணம் கொடுக்கும்போது வாசல்படிக்கு வெளியில் நின்றபடி வழங்கக் கூடாது. இதனால் உங்களுடைய அதிர்ஷ்டம் பிறருக்கு போய்விடும். உப்பு, பருப்பு, பால் ஆகியவை குறையாமல் வீட்டில் வைத்து கொள்ளுங்கள். இவை குறைந்தாலும் தரித்திரம் தான். இங்கே சொன்ன பழக்கங்களை முறையாக நீங்கள் கடைப்பிடித்தால் வீட்டில் தரித்திரம் விலகி செல்வம் பெருகும் என்று ஆன்மிக ரீதியாக நம்பப்படுகிறது

Tags :
ஆன்மிகம்செல்வம்தரித்திரம்ஜாதகம்
Advertisement
Next Article