முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விருது விழாவில் அவமானத்தை சந்தித்த பிரபலம்! இரவும் முழுவதும் நினைத்து தூங்காத பாலிவுட் நடிகை

07:20 AM Apr 28, 2024 IST | shyamala
Advertisement

நடிகை வித்யாபாலனுக்கு விருது வழங்கியபோது ஏற்பட்ட அவமானத்தை நினைத்து தூங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன், தமிழிலில் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். மறைந்த சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த நிலையில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நம்முடன் அவர் பகிர்ந்துள்ளார். தான் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டேன்.

Advertisement

அப்போது, 'ஹேய் பேபி' படத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கொடுத்தனர். அது ரசிகர்களின் ஆதரவை பெறாததற்கான விருது. அந்த விருதை அறிவித்தபோது, எனது உடைகள் நான் தேர்வு செய்தது அல்ல. ஆடை வடிவமைப்பாளர்தான் தயார் செய்து கொடுத்தார் என்றேன். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. அந்த நேரத்தில் தான் தைரியமாக பேசமுடியாமல் தவித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், அந்த விருதை மவுனமாக வாங்கிக்கொண்டதாகவும், அந்த அவமானத்தை நினைத்து அன்று இரவெல்லாம் தான் தூங்கவில்லை என்றார். தனிமையாக இருப்பதுபோல் உணர்ந்தேன். சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்கு வந்தால் இதுபோன்ற அவமானங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டதாகவும், தனக்கு மாடர்ன் உடைகளை விட புடவை அணிவது மிகவும் பிடிக்கும்'' என்றும் கூறினார்.

கிழிந்த ரூபாய் நோட்டுகளை இனி ஈசியாக மாற்றலாம்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
vidhybalan
Advertisement
Next Article