For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Viral Video | உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்து தண்டவாளத்தில் படுத்த மாணவி..!! அசந்து தூங்கிவிட்டதால் தப்பித்த உயிர்..!!

Bihar Woman Falls Asleep On Railway Track While Waiting to Die
02:20 PM Sep 11, 2024 IST | Chella
viral video   உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்து தண்டவாளத்தில் படுத்த மாணவி     அசந்து தூங்கிவிட்டதால் தப்பித்த உயிர்
Advertisement

பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் உள்ள சகியா என்ற ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்தோடு ரயில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவ்வழியாக எந்த ரயிலும் வராததால், ஒருகட்டத்தில் தன்னை அறியாமல் தண்டவாளத்திலேயே தூங்கிவிட்டார். இதையடுத்து தான், மோதிஹிரியிலிருந்து முசாபர்பூர் வரை செல்லும் ரயிலொன்று அத்தடத்தில் வந்துள்ளது.

Advertisement

அப்போது, தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் (மாணவி) படுத்துக் கிடப்பதை கண்ட லோகோ பைலட், உடனடியாக சுதாரித்து கொண்டு, அவசர பிரேக்குகளை பயன்படுத்தி, ரயிலை நிறுத்தியுள்ளார். சரியாக அப்பெண் தலை அருகேயே ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவரின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதையடுத்து, ரயிலிருந்து இறங்கிய லோகோ பைலட்டும், அங்கிருந்த பயணிகளும் அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அங்கிருந்து செல்ல மறுத்த அவர், தான் உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் என அடம்பிடித்துள்ளார்.

இதென்னப்பா சோதனை என நினைத்த அங்கிருந்தோர், பொறுமையாக அப்பெண்ணிடம் 'ஏன் இப்படி தவறான முடிவெடுக்க நினைக்கிறீர்கள்?' என கேட்டுள்ளனர். அதற்கு அப்பெண், "குடும்ப பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருக்கிறேன். எனது காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதனால் இந்த முடிவு எடுக்க நினைத்தேன்" என பதிலளித்துள்ளார். மேலும், "என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? நான் சாக வேண்டும். உங்களுக்கும் இதற்கு என்ன சம்பந்தம் உள்ளது?" என்று கேட்டு அழுதுள்ளார். பிறகு அவரை சமாதானப்படுத்திய பயணிகள், அங்கிருந்து அப்பெண்ணை அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More : புதுசா வீடு வாங்கப்போறீங்களா..? ரியல் எஸ்டேட் ஆணையம் கொண்டு வந்துள்ள சூப்பர் வசதி..!!

Tags :
Advertisement