முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கிராமப் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம்..!! காட்டுக்குள் தொங்கிய சடலம்..!! பீதியில் மக்கள்..!!

They stopped the women, kidnapped them into the bush and raped them.
01:19 PM Oct 09, 2024 IST | Chella
Advertisement

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த இரண்டு கிராமத்துப் பெண்கள் அதிகாலை நேரத்தில் இயற்கை உபாதைகளுக்காக தங்கள் வீட்டிற்கு வெகு தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, லால்பூர் கிராமத்தைச் சேர்ந்த இருவர் அந்த பெண்களைத் தடுத்து நிறுத்தி, புதருக்குள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவர்களை அங்கேயே விட்டு விட்டு, அந்த இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சுயநினைவு அடைந்து தனது வீட்டிற்குச் சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

Advertisement

இதையடுத்து, குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், அங்கு மற்றொரு பெண் மாயமாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மறுநாள் அந்த காட்டில் உள்ள மரத்தில் ஒரு பெண் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவமானம் தாங்க முடியாமல் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : விவசாயிகளே இனி கவலை வேண்டாம்..!! நடைமுறைக்கு வரும் மத்திய அரசின் மாஸ் திட்டம்..!!

Tags :
கிராமம்பாலியல் பலாத்காரம்பெண்கள்
Advertisement
Next Article