முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விஜய்க்கு வசிய மருந்து..!! புஸ்ஸி ஆனந்தின் மாஸ்டர் பிளான்..!! கட்சியை அறிவிக்க சொன்னதே இந்த கட்சி தானாம்..!!

08:57 AM Feb 12, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பல உண்மைகளை புட்டு புட்டு வைத்துள்ளார். அதன்படி, தற்போது விஜய்க்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருப்பது புஸ்ஸி ஆனந்த் தான் என்பது அனைவருக்குமே தெரியும். விறகு கடை முதலாளியாக இருந்த இவர் இப்போது விஜய்க்கு எல்லாமுமாக மாறிப் போயிருக்கிறார். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகரின் கனவும் ஆசையும். அவரையே ஓரம் கட்டி விஜய்க்கு நெருக்கமான ஒருவராக மாறி இருக்கிறார் இந்த புஸ்ஸி ஆனந்த். இதை எஸ்ஏ சந்திரசேகர் ஒரு முறை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

Advertisement

அதாவது புஸ்ஸி தன் மகனுக்கு கேரளா மந்திரவாதிகள் மூலம் வசிய மருந்து வைத்து விட்டார். அதனால் தான் விஜய் அவருடைய கண்ணசைவுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்கிறார் என குறிப்பிட்டிருந்தார். அதை பற்றி சொல்லி இருக்கும் பயில்வான், விஜய் கட்சி அறிவிப்பை வெளியிட்டதற்கு பின்னால் முக்கிய கட்சி தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார். அதாவது விஜய் புஸ்ஸி ஆனந்த் மூலம் தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அதே போன்று தான் அமித்ஷாவுடன் ஆன மீட்டிங்கும் நடந்தது. அப்போது இந்த கட்சி தொடங்குவது குறித்த விஷயத்தை விஜய் சொல்லி இருக்கிறார்.

உடனே அமித்ஷா இப்போது அறிவிப்பை வெளியிடுங்கள். அப்போதுதான் நாடாளுமன்றத்தில் திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறையும் என்று சொல்லியுள்ளார். அதனால் தான் திடீரென தன் கட்சி அறிவிப்பை விஜய் வெளியிட்டிருப்பதாக பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவருடைய இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags :
அமித்ஷாதமிழக வெற்றி கழகம்நடிகர் விஜய்பயில்வான் ரங்கநாதன்பாஜகபுஸ்ஸி ஆனந்த்
Advertisement
Next Article