For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது...! இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இருக்கும்...!

05:30 AM Dec 29, 2023 IST | 1newsnationuser2
விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது     இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இருக்கும்
Advertisement

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அவரது உடலை பொதுமக்களின் பார்வைக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுவதால் அவரது உடலை அண்ணாசாலை தீவுத்திடலில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இங்கு உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பின்னர், இறுதிச் சடங்குகளுக்காக உடலை கோயம்பேடு அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

Tags :
Advertisement