For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Vijay | திருவனந்தபுரத்தில் இறங்கிய நடிகர் விஜய்..!! அதிர்ந்துபோன ஏர்போர்ட்..!! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..!!

05:53 PM Mar 18, 2024 IST | 1newsnationuser6
vijay   திருவனந்தபுரத்தில் இறங்கிய நடிகர் விஜய்     அதிர்ந்துபோன ஏர்போர்ட்     ஆரவாரம் செய்த ரசிகர்கள்
Advertisement

14 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய், ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ள நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடைசியாக “லியோ” என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் "The Greatest of All Time" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.

இந்நிலையில், The Greatest of All Time படத்துக்காக நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றுள்ளார். முன்னதாக அவர் ஷூட்டிங்கிற்காக வரவுள்ள தகவல் கசிந்ததும் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து போஸ்டர்கள், பேனர்கள் என மலையாள திரையுலகினரே திக்குமுக்காடும் அளவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

இதற்கிடையே, விஜய் இன்று சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வந்தடைந்தார். அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காலை முதலே விமான நிலையத்தில் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மாலை 5 மணியளவில் விமானம் மூலம் கேரளா வந்த விஜய்யை போலீசார் பலத்த பாதுக்காப்புடன் காருக்கு அழைத்துச் சென்றனர். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளது.

முன்னதாக விஜய் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான வேலாயுதம், அதனைத் தொடர்ந்து காவலன் படத்தின் ஷூட்டிங்கிறாக விஜய் கேரளாவுக்கு சென்றிருந்தார். பின்னர் அவரின் எந்த படத்தின் ஷூட்டிங்கும் அங்கு நடைபெறவில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் கேரளாவுக்கு வந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ஐ.பெரியசாமி வழக்கில் திடீர் திருப்பம்..!! லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Advertisement