முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கிளினிக்கில் ஜோராக நடந்த பாலியல் தொழில்..!! சிகிச்சைக்கு செல்வதுபோல் நோட்டமிட்ட போலீஸ்..!! ஈரோடு, பல்லடம் பெண்களாம்..!!

In Madurai, the police arrested two people, including a woman, who was engaged in sex work in the name of 'Ayurvedic Clinic'.
10:15 AM Oct 19, 2024 IST | Chella
Advertisement

மதுரையில், 'ஆயுர்வேத கிளினிக்' என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Advertisement

மதுரையில் 'ஸ்பா', மகளிர் அழகு நிலையம் என்ற பெயர்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவோரை காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோமதிபுரம் மருதுபாண்டியர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் 'ஆயுர்வேத கிளினிக்' என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றம், விபச்சாரச் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமா மாலா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரகசியமாக கண்காணித்தனர். மேலும், அந்த கிளினிக்கின் தொலைபேசி எண்ணில் நோயாளிகள் போன்று பேசிய போலீஸார், சிகிச்சைக்குச் செல்வது போல் உள்ளே சென்றனர். அப்போது, அங்கு தனித்தனி அறையில் பாலியல் தொழில் நடப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

அங்கு பணியில் இருந்த விருதுநகரைச் சேர்ந்த மேலாளர் செல்வராணி, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஊழியர் பிரபாகரன் ஆகியோரிடம் விசாரித்தனர். விசாரணையில், மணிகண்டன் என்பவர், ஆயுர்வேத கிளினிக் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதும், இதற்காகவே ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து இளம்பெண்களை வரவழைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து செல்வராணி (30), பிரபாகரன் (25) ஆகிய இருவரையும் அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்தனர். மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே எஸ்.எஸ்.காலனி பகுதியில் சட்டவிரோதமாக மணிகண்டன் 'ஸ்பா' நடத்தி கைதானவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : இனி போக்குவரத்து நெரிசலே இருக்காது..!! 19 நிமிடங்களில் பறந்து போகலாம்..!! டிக்கெட் எவ்வளவு தெரியுமா..?

Tags :
பாலியல் தொழில்பெண்கள்மதுரை மாவட்டம்
Advertisement
Next Article