முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Rape: அதிரும் புதுச்சேரி!… மாநிலம் முழுவதும் இன்று பந்த்!… கடைகள் அடைப்பு!… பேருந்துகள், ஆட்டோர் ஓடாது!

05:05 AM Mar 08, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Rape: புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று (மார்ச் 8) பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

புதுச்சேரி மாநிலம் முத்தியாழ்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், காவல் நிலையம் முற்றுகை ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் இன்று பந்த் போராட்டம் அறிவித்துள்ளன. போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது. இதேபோல், மேலும் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பிலும் இன்று பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. பந்த் போராட்டம் அறிவித்துள்ளதால் இன்று புதுச்சேரியில் கடைகள் இயங்காது, பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போ உள்ளிட்டவைகளும் ஓடாது. சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

Readmore: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு எப்போது வெளியீடு..! முழு விவரம்..!

Tags :
Bandhஅதிரும் புதுச்சேரிகடைகள் அடைப்புமாநிலம் முழுவதும் இன்று பந்த்
Advertisement
Next Article