For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வேறு ஒருவரை காதலிக்கிறேன்..... காதலியின் பேச்சால் மனமுடைந்த வாலிபர்.... விபரீத செயல்.....

10:40 AM May 16, 2024 IST | shyamala
வேறு ஒருவரை காதலிக்கிறேன்      காதலியின் பேச்சால் மனமுடைந்த வாலிபர்     விபரீத செயல்
Advertisement

கர்நாடகாவில் மற்றொருவரை காதலிப்பதாக காதலி கூறியதால் காதலன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான தொட்டபல்லாபூரில் உள்ள கொடிகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அமேசான் நிறுவனத்தில் டெலிவரி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு, பாலாஜி இன்ஸ்டாகிராம் மூலம் கனகபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாகவும் மாறியது. காதலர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்,

Advertisement

இந்த நிலையில், அந்த இளம்பெண்ணை பாலாஜி திருமணம் செய்ய விரும்பினார். பாலாஜி தனது விருப்பத்தை அந்த பெண்ணிடம் தெரிவித்தார். இதனையடுத்து, திருமணத்தில் உடன்பாடில்லாத அந்த பெண், தனது வீட்டில் சம்மதிக்கவில்லை என சாக்குபோக்கு தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, பாலாஜி அந்த பெண்ணிடம் தன்னை திருமண செய்துகொள் என வற்புறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, பாலாஜியிடம் தான் வேறு ஒருவரை காதலிப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி மன உளச்சலில் இருந்துள்ளார். பின்னர், விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பாலாஜியின் பெற்றோர் அறிந்ததும், சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது தொட்டபல்லாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வருடமாக காதலித்து வந்த வாலிபர், திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவீரர் அலெக்சாண்டர் மரணம்!… தன் வரலாற்றை உலகம் அறிய செய்தவரின் அவிழாத மர்மம்!

Advertisement