For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்த கட்டம்...! மேலிருந்து துளையிடும் பணி தொடங்கியது... 4 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தகவல்...!

06:30 AM Nov 27, 2023 IST | 1newsnationuser2
அடுத்த கட்டம்     மேலிருந்து துளையிடும் பணி தொடங்கியது    4 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தகவல்
Advertisement

உத்தராகண்டில் இடிபாடுகளுக்கு நடுவே மற்றும் மலைக்கு மேலிருந்து என இரண்டு பக்கம் துளை இட்டு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய முன்னேற்றமாக, அவர்களுக்கு உணவு, குடிநீர் செலுத்த 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை வெற்றிகரமாக போடப்பட்டு, ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் குழாய் மூலம் அனுப்பட்டு வருகிறது.

அமெரிக்க ‘ஆகர்’ இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறால் துளையிடும் பணி தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு நடுவே மற்றும் மலைக்கு மேலிருந்து என இரண்டு பக்கம் துளை இட்டு மீட்பு பணிகள் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது. மேலிருந்து துளையிடும் பணி முடிய இன்னும் 4 நாட்கள் ஆகலாம், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் யாருடைய முயற்சி வெற்றி அடையும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

Tags :
Advertisement