முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தள்ளுவண்டி கடைக்கு சாப்பிட வந்தவருடன் ஏற்பட்ட தொடர்பு..! அடிக்கடி தனிமையில் உல்லாசம்..! தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த கொடூரம்..!

Contact with the person who came to eat at the trolley shop..! Fun in solitude often..! The cruelty that happened to the husband who cheated..!
07:28 AM Jul 17, 2024 IST | Shyamala
Advertisement

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு. தொழிலாளியான பிரபுவுக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். லாவண்யா தனது மாமியார் கலாவதியுடன் கே.என்.ஜி புதூரில் தள்ளுவண்டியில் டிபன்கடை நடத்தி வந்துள்ளார். அப்போது, அங்கு சாப்பிடுவதற்காக கர்நாடகாவை சேர்ந்த பைரே கவுடா என்பவர் அடிக்கடி வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் அடிக்கடி லாவண்யாவின் கடைக்கு டீ மற்றும் டிபன் சாப்பிட வந்த போது, லாவண்யாவுடன் பைரே கவுடாவிற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதனால், தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கணவர் பிரபுவுக்கு தெரிய வந்ததையடுத்து, மனைவியை அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். அதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு லாவண்யா உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட பிரபு உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த பத்து நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் பிரபு வீட்டில் இருந்து வந்து உள்ளார்.

இருப்பினும் தன்னுடைய உல்லாசத்துக்கு கணவர் இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து பிரபுவின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அதன் பின் கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில், தன்னுடைய கணவர் இறந்துவிட்டதாக மனைவி லாவண்யா நாடகமாடியுள்ளார். பிரபுவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனோடு தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

read more... நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்..!! வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Tags :
crime newsillegal affairkovai illegal affairtamil affair newstn crime newsகோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக
Advertisement
Next Article