For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சாப்பாடு கொடுக்கும் மாமா செய்த அசிங்கமான காரியம்..!! அந்தரங்க உறுப்பில் வலி..!! 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

The brutality that happened to a 3-year-old girl in Noida, Uttar Pradesh is shocking.
04:43 PM Oct 21, 2024 IST | Chella
சாப்பாடு கொடுக்கும் மாமா செய்த அசிங்கமான காரியம்     அந்தரங்க உறுப்பில் வலி     3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை மனதை உலுக்கும் வகையில் நடந்துள்ளது. இந்த வழக்கில் வகுப்பு ஆசிரியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 3 வயது சிறுமி, போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இதற்கிடையே, பள்ளி ஊழியர் ஒருவர் ஆபாச வீடியோக்களை பார்த்து பலமுறை அந்த சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறார்.

Advertisement

இந்த சம்பவத்தையடுத்து பயந்து போன சிறுமி, பள்ளிக்கு செல்லக்கூட பயந்துள்ளார். சிறுமி, அமைதியாக இருப்பதைப் பார்த்த அவருடைய பெற்றோர் என்ன நடந்தது என கேட்டுள்ளனர். அப்போது, சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். பள்ளியில் சாப்பாடு கொடுக்கும் மாமா, அசிங்கமான காரியங்களைச் செய்வதாக கூறினார். அவர் தனது உடலை கூர்மையான பொருட்களால் குத்துவதாகவும் தெரிவித்தார்.

இதைக் கேட்டு சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, ​​​​அவரது அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டதைக் கண்டுபிடித்தனர். உடனடியாக இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் திருமணமானவர். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வங்காளத்தில் வசிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (பிஎன்எஸ்) பிரிவு 65 (2), பிரிவு 5 எஃப், பிரிவு 5 எம் மற்றும் போக்சோ பிரிவு 6 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு அதிகாரி POCSO வக்கீல் ஜேபி பாடி கூறுகையில், சிறுமிக்கு 12 வயதுக்கு குறைவாக இருப்பதால் பிரிவு 65 (2) பயன்படுத்தப்பட்டுள்ளது.

Read More : ’’16 பெற்று பெருவாழ்வு வாழ்க’’..!! அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க சொன்ன முதல்வர் ஸ்டாலின்..? உண்மை என்ன..?

Tags :
Advertisement