முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடுத்தடுத்து பெண்கள் கொலை.! அதிர்ச்சியில் கிராம மக்கள்.! சிக்கிய கொலையாளியின் திக் திக் வாக்குமூலம்.!

02:23 PM Dec 26, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கடலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது பெண் தனது மகன் வீட்டிற்கு சென்று வருவதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது தொடர்பாக பல இடங்களிலும் அவரை தேடி இருக்கின்றனர். இந்நிலையில் காணாமல் போன பெண் ஆடைகள் களைந்த நிலையில் கரும்பு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகைகளும் திருடு போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று டிசம்பர் மாத தொடக்கத்தில் ஆடு மேய்க்கும் பெண் ஒருவரும் முந்திரி தோப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இரண்டு கொலைகளையும் ஒரு நபர் தான் செய்திருக்க வேண்டும் என்று முடிவிற்கு வந்தது காவல்துறை. இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணையில் இருந்த காவல்துறை திருமூர்த்தி என்ற பண்ருட்டியை சேர்ந்த 25 வயது இளைஞனை கைது செய்து விசாரித்தனர் .

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2 பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர்களது நகையை அருகில் உள்ள நகை கடையில் விற்றதும் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து நகை அடகு கடைக்கு சென்ற காவல்துறையினர் நகையை மீட்டனர். கைது செய்யப்பட்ட இளைஞர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் பகுதியில் இரண்டு பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Tags :
cuddalorepolice investigationTamilnaduTwo MurdersYouth Arrested
Advertisement
Next Article