For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இரவில் லாரி ஓட்டுபவர்களே உஷார்..!! லைட் அடித்து வழிப்பறி செய்யும் கும்பல்..!! கோவையில் அதிர்ச்சி..!!

The Superintendent of Police has received complaints that the trucks coming from Kerala towards Tamil Nadu are being blocked by torchlights near Navakarai Nandi temple in Coimbatore district and the truck drivers are being attacked and hijacked.
04:51 PM May 28, 2024 IST | Chella
இரவில் லாரி ஓட்டுபவர்களே உஷார்     லைட் அடித்து வழிப்பறி செய்யும் கும்பல்     கோவையில் அதிர்ச்சி
Advertisement

கோவை மாவட்டம் நவக்கரை நந்தி கோவில் அருகே கேரளாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வரும் லாரிகளை டார்ச் லைட் அடித்து வழிமறித்து லாரி ஓட்டுனர்களை தாக்கி வழிப்பறி செய்வதாக காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து ரோந்து பணி மற்றும் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.

Advertisement

இந்நிலையில், அந்த வழிப்பறி கும்பலை மடக்கி பிடித்த கேரளா – தமிழக எல்லை அருகில் உள்ள கந்தே கவுண்டன் சாவடி காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கோவை கந்தேகவுண்டன் சாவடி பகுதியைச் சேர்ந்த சபரீஷ், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கருவாச்சி (எ) குரு பிரகாஷ், உடுமலைப் பகுதியைச் சேர்ந்த சூர்யா, நாகராஜ் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தடியன் (எ) சிவா ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தமிழ் திரைப்படங்களில் வருவது போன்று டார்ச் லைட் அடித்து லாரிகளை வழிமறித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’ஐய்யோ என்ன விட்ருங்க’..!! 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பெரியப்பா மகன்..!! மேலும் இருவர் கூட்டு..!!

Tags :
Advertisement