முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிக்பாஸ் வீட்டில் உலா வந்த ’ட்ரிக்கி’..!! முதல் நாளே ஜாக்குலினுக்கு நடந்த சோகம்..!! 24 மணி நேரத்தில் வெளியேற்றம்..!!

People are very excited to know who will leave the Bigg Boss house on the first day itself.
07:19 AM Oct 07, 2024 IST | Chella
Advertisement

தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இம்முறை புதிய தொகுப்பாளர், பெரிய வீடு எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸோடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisement

நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார். பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட வீட்டை சுற்றி காண்பித்த அவர், இம்முறை போட்டியாளர்களுக்கு பெரும் ட்விஸ்ட் ஒன்றையும் வைத்துள்ளார். வழக்கமான இதுவரை பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் பெண்கள் என கலந்து ஒரு அணி உருவாகி இருந்ததைத் தான் நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

ஆனால், இங்கு, வீட்டிற்கு நடுவே சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசு கிழித்த கோடு போல் ஒன்று போடப்பட்டுள்ளது. அதில், கோட்டுக்கு ஒருபுறம் பெண்கள் அணியும், மற்றொரு புறம் ஆண்கள் அணியும் பிரிந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போட்டியாளர்களே தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில், அனைவரும் வெளியே படுத்து தூங்க வேண்டும் என ஆரம்பத்திலேயே ஆட்டத்தை ஆரம்பித்தது பிக்பாஸ். பின் மெல்ல மெல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர்களை பெண்கள் அணிக்கு பிங்க் ரூம் தான் வேண்டும் என சமாதானம்படுத்தியது.

அத்துடன் இதற்காக ஆண்கள் அணி கூறிய நிபந்தனையையும் ஏற்றது எனக் கூறியது. அந்த நிபந்தனை என்னவென்றால், பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணி கூறும் ஏதாவது ஒரு வாரம் பெண்கள் அணி எந்த ஆண்களையும் நாமிநேட் செய்யக்கூடாது என்பதே. ரூமிற்காக முதலில் இதற்கு பெண்கள் அணியில் இருந்த சச்சனா, ஆனந்தி, சுனிதா, தர்ஷா குப்தா போன்றோர் ஒப்புக் கொண்டனர். ஆனால், பின்னால் வீட்டிற்குள் வந்த பவித்ரா, தர்ஷிகா, ஜாக்குலின் ஆகியோர் ஆண்கள் அணியின் நிபந்தனைக்கு ஒத்துப் போகவில்லை.

இது மிகவும் ட்ரிக்கியாக உள்ளது என பவித்ரா ஆரம்பித்த வார்த்தை, நிகழ்ச்சி முடியும் வரை சுற்றிக் கொண்டே இருந்தது. புதிதாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அத்தனை பெண்களிடமும் பவித்ரா இந்த ட்ரிக்கி வார்த்தையை உபயோகித்து விட்டார். பின் அது தர்ஷிதாவிடம் ஒட்டிக் கொள்ள அவரும் அதையே பயன்படுத்தி வந்தார். இறுதியாக அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், தர்ஷிதாவும் ஜாக்குலினும் மட்டும் ஆண்கள் அணியின் நாமிநேஷன் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.

பின் விஜய் சேதுபதி, முடிவு ஆரம்பத்திலேயே எடுக்கப்பட்டுவிட்டது. அதை பெண்கள் அணி இருவருக்கும் புரிய வைக்க வேண்டும் என கூறிய நிலையில், தர்ஷிதா அதை ஏற்றுக்கொண்டு பிங்க் ரூமிற்குள் செல்கிறார். ஆனால், விடாப்பிடியாக இருந்த ஜாக்குலின் பிங்க் ரூமிற்கு செல்ல மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து பெண்கள் அணியிடம் பேசுவதை விட்டுவிட்டு ஆண்கள் அணியிடம் விவாதித்து வந்தார். அவர்கள் இதை பெண்கள் அணியிடம் போய் பேசுமாறு கூறியும் அவர் தொடர்ந்து தன் பக்க கருத்துகளையே கூறிவந்தார்.

தர்ஷிதா எவ்வளவு வலியுறுத்தியும் ரூமிற்கு வராமல் அடம்பிடித்த, ஜாக்குலின் தன்னுடையை நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகக் கூறி ஹாலிலேயே படுத்துக் கொள்வதாக கூறினார். இதற்கிடையே தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் விஜய் சேதுபதி. அதுதான் இன்னும் 24 மணி நேரத்தில் முதல் எலிமினேஷன் நடக்கும் என்று. இந்த வார்த்தை வந்த முதல் நாளே பிக்பாஸ் வீட்டிற்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது. இதனால், முதல் நாளிலேயே யார் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வார்கள் என மிகுந்த ஆவலில் மக்கள் உள்ளனர்.

Read More : ’ஆண்களின் விந்தணுவுக்கு ஆபத்து’..!! ’உட்காரும் போது இனி இந்த தவறை செய்யாதீங்க’..!!

Tags :
தமிழக மக்கள்பிக்பாஸ்விஜய் டிவிஜாக்குலின்
Advertisement
Next Article