முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

01:36 PM Dec 05, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக தமிழ்நாடு அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக அதிக மழை பெய்துள்ளது. இதனால் பல பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது மற்றும் பல்வேறு பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருக்கிறது.

இதனால் அந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் படகுகள் மூலமாக அவர்களை மீட்கும் பணியில் தொடர்ச்சியாக அதிகாரிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே மிக்ஜாம் புயல் காரணமாக இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறையை இந்த 4 மாவட்டங்களிலும் தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
தமிழ்நாடு அரசுபள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறைமாணவர்கள்மிக்ஜாம் புயல்
Advertisement
Next Article