For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Toll | திமுக, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை உடைத்தெறிந்த மத்திய அரசின் அறிவிப்பு..!! வாகன ஓட்டிகள் ஷாக்..!!

07:22 AM Mar 26, 2024 IST | Chella
toll   திமுக  அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை உடைத்தெறிந்த மத்திய அரசின் அறிவிப்பு     வாகன ஓட்டிகள் ஷாக்
Advertisement

தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,381 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைகள் உள்ளது. இதில், மாநிலம் முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் 70-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் 6, விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3, விக்கிரவாண்டி-நாகை நெடுஞ்சாலையில் 3, ஓசூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3, சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3, மகாபலிபுரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 என மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை 16ஆக குறைக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், புதிதாக 20 சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : Income | ஊழியர்களின் சம்பளம் அதிரடியாக உயரப்போகிறது..!! மத்திய அரசு எடுத்த மாஸ் முடிவு..!!

Advertisement