முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்..!! இன்று மாலை வெளியாகும்..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

01:18 PM Dec 15, 2023 IST | 1newsnationuser6
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2, 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. இதற்கான முதல்நிலை தேர்வுகள் முடிந்து, கடந்த பிப்வரி 25ஆம் தேதி முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவித்தும் 10 மாதம் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை.

இதனால் தேர்வெழுதிய தேர்வர்கள் கவலையில் உள்ளனர். தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் உட்பட பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், 'டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும், தாமதத்திற்காக காரணம் குறித்த அறிக்கை இன்று (டிச.15) மாலை வெளியாகும் என்றும்' அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Tags :
அமைச்சர் தங்கம் தென்னரசுகுரூப் 2 தேர்வு முடிவுகள்டிஎன்பிஎஸ்சிதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article