முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சுவையான இந்த வடை செய்ய, 10 நிமிஷம் போதும்.., மாவு அரைக்க தேவையில்லை....

05:59 AM Oct 13, 2023 IST | 1newsnationuser1
Advertisement

வடை யாருக்கு தான் பிடிக்காது. சூடான வடையும் டீயும் சாப்பிடுவது ஒரு தனி சுகம். என்ன தான் வடை பிடித்தாலும் பெரும்பாலும் அதை யாரும் வீட்டில் செய்வதில்லை. இதற்க்கு முக்கிய காரணம் வடை செய்ய அதிக நேரமாகும். அனால் வெறும் 10 நிமிடத்தில் வடை செய்து விடலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?? ஆம், சுலபமாக எப்படி வடை செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

Advertisement

முதலில், அவல் 1 கப் எடுத்துக்கொள்ளுங்கள். அதை 3 முதல் 4 முறை தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து, அவல் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துவிடுங்கள்.. பின்னர் ஊற வைத்த அவளை தனியாக எடுத்து நன்கு பிழிந்து விடுங்கள். அதில் பச்சரிசி மாவு 4 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து, பின் ரவை 1 கப் அளவு அதில் சேர்க்கவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.. இப்போது பிசைந்த மாவில், நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், சிறு துண்டு இஞ்சி, நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவை சேர்த்து மீண்டும் நன்கு பிசைந்து விடுங்கள்..

இப்போது வடை செய்ய மாவு தயார்.. இப்போது ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றுங்கள். பின் எண்ணெய் சூடேறியதும், அடுப்பை மிதமான தீயில் வைத்துவிடுங்கள். பிறகு உள்ளங்கையில் தண்ணீரை தொட்டுக் கொண்டு தயார் செய்து வைத்துள்ள மாவை வடை போல் தட்டி எண்ணெயில் போடவும். இரு புறமும் நன்கு வெந்ததும் அதை எண்ணெயில் இருந்து எடுத்து விடுங்கள்.. இப்போது சுவையான வடை ரெடி..

Tags :
மாவுவடை
Advertisement
Next Article