முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இதை கட்டாயம் கடைபிடிக்கணும்’..!! தவெக மாநாட்டிற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய காவல்துறை..!!

The police has given conditional permission for Vijay's Thaveka conference to be held at Vikravandi on October 27.
07:19 AM Sep 26, 2024 IST | Chella
Advertisement

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து தலைவர் விஜய், மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

இதுதொடர்பாக முன்னதாக கடந்த வாரம் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், விக்கிரவாண்டியில் அக்.27ஆம் தேதி நடைபெறும் விஜய்யின் தவெக மாநாட்டிற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக் காட்டி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Read More : சனி பகவானால் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள்..!! இந்த லிஸ்ட்டில் நீங்களும் இருக்கீங்களா..?

Tags :
காவல்துறை அனுமதிதவெக மாநாடுபுஸ்ஸி ஆனந்த்விஜய்
Advertisement
Next Article