For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'சினிமாவில் இருந்து விலக இது தான் காரணம்..' - நடிகை பாவனா ஓபன் டாக்!

05:05 PM May 07, 2024 IST | Mari Thangam
 சினிமாவில் இருந்து விலக இது தான் காரணம்      நடிகை பாவனா ஓபன் டாக்
Advertisement

சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. அறிமுக படத்திலேயே மிக பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தீபாவளி திரைப்படத்தில் நடந்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒரு ரவுண்டு வந்த பாவனா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பும் போது காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

அதிலிருந்து மீண்ட பாவனா, கடந்த 2018 ஆம் ஆண்டு, கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகியே இருந்தார் பாவனா. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாவனா, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வந்தது, வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பினார்கள், சிலருடன் இணைத்தும் பேசினார்கள்.

ஒருகட்டத்தில் நான் உயிரோடு இருக்கும் போதே இறந்து விட்டதாக வதந்திகளை உருவாக்கினார்கள். எனக்கு சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியே வர சில காலம் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருந்தேன். தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

Tags :
Advertisement