நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையே இதுதான்..!! மக்கள் சொல்வது என்ன..? வெளியானது சர்வே முடிவு..!!
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரமும் நிறைவுபெறுகிறது. அதற்கு மேல் பிரச்சாரம் செய்தால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், விலைவாசி உயர்வை மிகப்பெரிய பிரச்சனையாக கருதுவதாக மேற்கு இந்தியாவில் வசிக்கும் 22% மக்கள் தெரிவித்துள்ளனர். டைம்ஸ் நவ் - ETG ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய சர்வே முடிவுகளில், தங்களது இரண்டாவது மிகப்பெரிய பிரச்சனை ஹிந்துத்துவா என 21 சதவீதம் பேரும், வேலைவாய்ப்பின்மை என 16 சதவீத பேரும், தேசியவாதம் என 15% பேரும், வளர்ச்சியின்மை என 14 சதவீத பேரும், ஊழலை 7 சதவீதம் பேரும் பிரச்சனையாக தெரிவித்துள்ளனர்.
Read More : ”இருக்குற பிரச்சனையில இது வேறயா..? ஓபிஎஸ் – பாஜக இடையே கடும் மோதல்..!! பெரும் பரபரப்பு..!!