முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"முன்னாள் மத்திய அமைச்சர் மகனுக்கு சீட் தரக்கூடாது.." காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்..!!

07:32 PM Feb 03, 2024 IST | 1newsnationuser7
Advertisement

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தற்போது எம்பி யாக இருந்து வரும் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என சிவகங்கை காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்காக தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர்களான சுதர்சன நாச்சியப்பன், K.R ராமசாமி உட்பட 80-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பேசிய வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர் .

ராகுல் காந்தியை விமர்சித்தும் பிரதமர் மோடியை ஆதரித்தும் தொடர்ந்து தனது கருத்துக்களை பகிர்ந்து வரும் கார்த்தி சிதம்பரத்திற்கு இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட அனுமதி வழங்கக் கூடாது என்ற தீர்மானம் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏற்கனவே திமுக நிர்வாகிகளும் சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் உட்பட எந்த கூட்டணி கட்சிகளுக்கும் கொடுக்கக் கூடாது என தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags :
CONGRESSkarthi chidambaramNo SeatSivagangai ConstituencyTamilnadu
Advertisement
Next Article