For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'இனிமே தான் பிக்பாஸில் ஆட்டமே இருக்கு’..!! வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே செல்கிறார் அர்ணவ் முன்னாள் மனைவி..?

It has been reported that actor Arnav's ex-wife Divya will be a wild card contestant in Bigg Boss season 8.
04:19 PM Oct 18, 2024 IST | Chella
 இனிமே தான் பிக்பாஸில் ஆட்டமே இருக்கு’     வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே செல்கிறார் அர்ணவ் முன்னாள் மனைவி
Advertisement

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக நடிகர் அர்ணவ் முன்னாள் மனைவி திவ்யா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சாச்சனா, நடிகை தர்ஷா குப்தா, சத்யா குமார், தீபக், ஆர்ஜே ஆனந்தி, குக் வித் கோமாளி புகழ் சுனிதா, நடிகர் ரஞ்சித், சௌந்தர்யா, ஜெஃப்ரி, தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், அருண் பிரசாத், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் உள்ளனர்.

பிக்பாஸில் அர்னவ் என்பவர் போட்டியாளராக உள்ளார். இவர் ஒரு சீரியல் நடிகர். மகராசி, கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த கன்னட நடிகை திவ்யா ஸ்ரீதருடன் அர்னவ் நடித்திருந்தார். அப்போது இருவரும் காதலித்து 5 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வசித்து வந்தனர். இதையடுத்து, அர்னவை திருமணம் செய்து கொண்டதாக ஸ்ரீதிவ்யா சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தார்.

அர்னவ், செல்லம்மா சீரியலில் வாய்ப்பு கிடைத்தது முதல் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட தொடங்கியது. தன்னை திருமணம் செய்து கொண்டு மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக திவ்யா குற்றம்சாட்டினார். தன்னை அர்னவ் கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து கொண்டார் என திவ்யா கூறியிருந்தார். மேலும், அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்த போது தன்னை எட்டி உதைத்து, அடித்து சித்ரவதை செய்ததால் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அர்னவ் திடீரென தலைமறைவாக இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையை கூட பார்ப்பதற்கு அர்னவ் வரவில்லை. இதுவரை அர்னவ், திவ்யாவுடன் சேரவில்லை. இந்நிலையில்தான் அர்னவ் பிக்பாஸுக்குள் போட்டியாளராக சென்றுள்ளார். இந்நிலையில், தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அர்ணவ் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள நிலையில், மற்றொரு போட்டியாளராக வைல்டு கார்டு மூலம் திவ்யா செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டிஆர்பி எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால், அதனை சரிசெய்யும்பொருட்டு, இந்த நடவடிக்கையை பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளர்கள் எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.

Read More : டெங்கு பாதிப்பை எந்த டெஸ்ட் எடுத்தால் உறுதி செய்ய முடியும்..? எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

Tags :
Advertisement