முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது பயமே இல்லை’..!! ’யாரை வேண்டுமானாலும் தாக்கலாம்’..!! சந்தி சிரிக்கிறது’..!! எடப்பாடி பழனிசாமி காட்டம்..!!

AIADMK General Secretary Edappadi Palaniswami has criticized the law-and-order nexus for laughing at the plight of the Vidya DMK regime, which has no fear of the law and can attack anyone.
04:18 PM Sep 03, 2024 IST | Chella
Advertisement

விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமுமின்றி, யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Advertisement

விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமுமின்றி, யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Read More : தமிழ்நாட்டில் அறிக்கை வெளியானால் 500 பேருக்கு மேல் பாலியல் புகாரில் சிக்குவார்கள்..!! புயலை கிளப்பிய நடிகை ரேகா நாயர்..!!

Tags :
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிசட்டம் - ஒழுங்குதிமுக ஆட்சிமுதல்வர் முக.ஸ்டாலின்
Advertisement
Next Article