முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’உங்கள் வீட்டில் தீய சக்தி இருக்கு’..!! ஒரே தெருவில் 5 பேருக்கு டிமிக்கி கொடுத்த இளம்பெண்..!! பணம், நகைகளுடன் ஓட்டம்..!!

Those who had no money, raised money by selling their cattle. Ramya took the money from them.
02:29 PM Sep 26, 2024 IST | Chella
Advertisement

உழைக்காமல் வரும் எந்த பணமும் நம்முடையது கிடையாது. அதிகமாக ஆசைப்பட்டால், இருக்கிறதும் போய்விடும். அந்த வகையில், ஒரே தெருவில் 5 பேரிடம் உருக்கமாக பேசி ஏமாற்றிவிட்டு சென்றிருக்கிறார் இளம்பெண் ரம்யா. தனக்கு மாந்திரீகம் தெரியும் என்றும், உங்கள் வீட்டில் இருந்து தீய சக்திகளை விரட்டி விடுகிறேன் என்றும் கூறி ரம்யா 5 பேரிடம் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 10 சவரன் நகைகளை ஏமாற்றிய சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ரம்யாவிடம் நகைகளையும், பணத்தையும் பறிகொடுத்து பாதிக்கப்பட்ட சாந்தா, நானி, லீலா, ஓமனா, பாபு உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், ரம்யா தன்னை மாந்திரீகம் தெரிந்தவர் என்றும், தங்கள் வீடுகளை அச்சுறுத்தும் தீய சக்திகளை விரட்டுவதாகவும் கூறியிருக்கிறார். சாந்தாவின் வீட்டில் சில நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்று கூறி தனது மோசடி நாடகத்தைத் தொடங்கியுள்ளார்.

தன்னை ஒரு தேர்ந்த மாந்திரீகவாதி போல் காட்டி, அவர்களது வீடுகள் தீய ஆவிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக அவர்களை ஏமாற்றியுள்ளார் ரம்யா. தீய ஆவிகளிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்க போலியான சூனியம் செய்து, அதற்கு பணம் கேட்டுள்ளார். பணம் இல்லாதவர்கள், தங்கள் கால்நடைகளை விற்று பணம் திரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து பணத்தை ரம்யா பெற்றுக் கொண்டார்.

இதற்கிடையில் ரம்யா, ஓமனாவிடம் இருந்து மூன்றரை சவரன் தங்க நகைகளையும், மற்றவர்களிடம் நகைகளையும் ஒரு வாரமாக தனக்குப் பிணையாகத் தேவை எனக் கூறி எடுத்துக் கொண்டிருக்கிறார். பின்னர் ரம்யா, 5 பேரையும் தமிழ்நாட்டில் உள்ள அத்தின்கரை தேவாலயத்திற்கு சடங்குக்காக செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், சடங்கு நடைபெறாததால், 5 பேர் கொண்ட குழுவினர் வீடு திரும்பினர்.

வீட்டிற்கு திரும்ப வந்ததும் அவர்கள் ரம்யாவைத் தொடர்பு கொள்ள முயன்றனர். அப்போது, செல்போனில் ரம்யாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர், கிளிமானூர் அருகே உள்ள நகைக்கடையில் ஓமனாவின் தங்கச் சங்கிலி விற்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் ரம்யாவை கண்டுபிடிக்கக் கோரி புகார் அளித்திருந்த நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : ’நாம மற்றவர்களிடம் எப்படி பழகுகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கு’..!! ’வழிஞ்சிட்டு நின்னா இப்படித்தான் நடக்கும்’..!!

Tags :
இளம்பெண்நகைபணம்
Advertisement
Next Article