For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் வழக்கு...!

05:15 AM May 05, 2024 IST | Vignesh
கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் வழக்கு
Advertisement

கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

தேனியில் தனியார் விடுதியில் வைத்து சவுக்கு சங்கரை நேற்று கைது செய்த கோவை காவல்துறை., சவுக்கு சங்கர் உடன் இருந்த இருவரை விசாரித்தபோது கஞ்சா வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன்., அவர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு‌ செய்யப்பட்டுள்ளது.

சமூக வலை தளங்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் யூடியூபர் சவுக்கு சங்கர். முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் நேர்காணலில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் நேற்று அதிகாலையில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல் துறை அலுவலகத்திற்கு தேனியில் இருந்து காவல் துறையினர் அழைத்து சென்றனர். அவர் மீது ஐந்து பிரிவுகள் என் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags :
Advertisement