For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’அப்புறம் என்ன வெங்காயத்துக்கு மெஷின் வெச்சிருக்கீங்க’..? கொந்தளித்த மன்சூர் அலிகான்..!!

03:47 PM Apr 19, 2024 IST | Chella
’அப்புறம் என்ன வெங்காயத்துக்கு மெஷின் வெச்சிருக்கீங்க’    கொந்தளித்த மன்சூர் அலிகான்
Advertisement

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 'பலாப்பழம்' சின்னத்தில் போட்டியிடும் மன்சூர் அலிகான் வாக்குப்பதிவு மையங்களை பார்வையிட்டார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவரது பலாப்பழச் சின்னம் மீது வெளிச்சம் படாததால் மன்சூர் அலிகான் கடுப்பாகி அங்கிருந்த தேர்தல் அலுவலர்களிடமும் கோபம் காட்டினார். ''இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. முதல் இயந்திரத்தில் பிரதான வாக்காளர்களின் சின்னம் 'பளீச்' என்று தெரிகிறது.

Advertisement

ஒன்று, இரண்டு என்று மக்கள் அவர்களின் சின்னங்களை பார்த்து குத்திவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால், 2-வது இயந்திரம் மீது வெளிச்சம் படவில்லை. லைட்டுகளை அணைத்து வைத்திருக்கிறார்கள். இதனால் அதில் உள்ள சின்னங்கள் கண்களுக்கே தெரியவில்லை. என்னுடைய பலாப்பழச் சின்னமும் இருட்டாகத் தெரிகிறது. அது பூசணிக்காயா அல்லது பலாக்காயா அல்லது வேறு எந்தக் காய் என்றே தெரியவில்லை.

அதிகாரிகளிடம் கேட்டால், 'பக்கத்தில் வி.வி.பேட் இருக்கிறது. அதன் மீது லைட் படக் கூடாது' என்கிறார்கள். அப்புறம் எப்படி மக்கள் சின்னத்தை பார்ப்பார்கள். வி.வி.பேட் மீது லைட் படக் கூடாது என்றால் அப்புறம் என்ன வெங்காயத்துக்கு மெஷின் வைத்திருக்கிறார்கள். பேசாமல் பேப்பரில் குத்தி ஓட்டுப் போட்டிருக்கலாமே?. ஆயிரத்தெட்டு மெஷின் எதற்கு?” என்று கொதித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

Read More : ’எத்தனையோ முறை சொல்லியும் கேட்கல’..!! இத்தனை கிராமங்களா..? ஒருத்தரும் ஓட்டுப் போடலையாம்..!!

Advertisement