முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Tn Govt: இவர்களுக்கு ஜூலை மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தம்...! என்ன காரணம்...?

The Tamil Nadu government has informed that if the pensioners do not provide the life certificate, the pension will be withheld from next month.
06:45 AM Jun 12, 2024 IST | Vignesh
Advertisement

ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்காவிட்டால் அடுத்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த நிதி ஆண்டு முதல் (2023-2024) ஒவ்வொரு ஓய்வூதியரும் அவர்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் தவறினால் அதற்கு அடுத்த மாதத்தில் ( Grace Period ) வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும் எனவும், குடும்ப ஓய்வூதியர் அவரது இணையர் இயற்கை எய்திய நாளுக்கு அடுத்த நாள் எந்த மாதத்தில் வருகின்றதோ அந்த மாதத்தில் தவறினால் அதற்கு அடுத்த மாதத்தில் ( Grace period) வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த நிதி ஆண்டை பொருத்தமட்டில் கருவூல கணக்குத் துறை ஆணையர் அவர்களின் வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் 01/07/2023 முதல் 31/03/2024 க்குள் எந்த நாளில் வாழ்நாள் சான்றிதழ் அளித்தாலும் அது 2023 - 2024 ம் நிதி ஆண்டுக்கான வாழ்நாள் சான்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நிதி ஆண்டு முதல் (2024- 2025) ஒவ்வொரு ஓய்வூதியரும் அவர்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் தவறினால் அதற்கு அடுத்த மாதத்தில் (Grace Period ) வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

மேலும் குடும்ப ஓய்வூதியர் அவரது இணையர் இயற்கை எய்திய நாளுக்கு அடுத்த நாள் எந்த மாதத்தில் வருகின்றதோ அந்த மாதத்தில் தவறினால் அதற்கு அடுத்த மாதத்தில் ( Grace period) வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும் எனவும் தகவலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு வாழ்நாள் சான்று அளிக்காத பட்சத்தில்; Grace Period க்கு அடுத்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும் எனவும் தகவலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags :
Govt stafflife certificatepensionpension schemetn government
Advertisement
Next Article