For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முதல்வரை சந்தித்த அடுத்த நிமிஷமே..!! போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜாக்டோ - ஜியோ அமைப்பு..!!

02:39 PM Feb 14, 2024 IST | 1newsnationuser6
முதல்வரை சந்தித்த அடுத்த நிமிஷமே     போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜாக்டோ   ஜியோ அமைப்பு
Advertisement

நாளை அறிவித்திருந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

Advertisement

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர். அத்துடன் நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.

இந்த சூழலில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் தலைமை செயலகத்தில் சந்திப்பு நடத்தினர். நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த நிலையில் சந்திப்பு நிகழ்ந்தது. இந்நிலையில் நாளை நடைபெற இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அறிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றனர்.

Tags :
Advertisement