முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விவசாயிகளுக்கு குட் நியூஸ்... மானிய விலையில் உரம்.. 2025 மார்ச் வரை ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு...!

The Union Cabinet has approved nutrient-based subsidy rates for Rabi season for fertilisers
06:15 AM Sep 19, 2024 IST | Vignesh
Advertisement

உரங்களுக்கு ரபி பருவத்தில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு 2024-ம் ஆண்டு ரபி பருவத்தில் (01.10.2024 முதல் 31.03.2025 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான ரசாயனம் - உரத் துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு ரபி பருவத்திற்கான உத்தேச நிதித் தேவை தோராயமாக ரூ.24,475.53 கோடியாக இருக்கும்.

Advertisement

நன்மைகள்: விவசாயிகளுக்கு மானிய விலையில், கட்டுப்படியாகும், நியாயமான விலையில் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். சர்வதேச உரங்கள், இடுபொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு பி அண்ட் கே எனப்படும் பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான மானியம் சீரமைக்கப்படும். செயல்படுத்தல் உத்தி, இலக்குகள்: பி அண்ட் கே உரங்களுக்கான மானியம் இந்த ரபி பருவத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட விகிதங்களின் அடிப்படையில் வழங்கப்படும். இது இந்த உரங்கள் விவசாயிகளுக்கு மலிவு விலையில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும்.

Tags :
Cabinet approvescentral govtfarmersFertilizer
Advertisement
Next Article