For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்து மூளை, கல்லீரல், இதயத்தை சமைத்து சாப்பிட்ட மகன்..!! தூக்குல போடுங்க..!! நீதிபதிகள் தீர்ப்பு..!!

This gruesome murder has shaken the conscience of the society. A person who has eaten cannibals is unlikely to repent.
01:23 PM Oct 03, 2024 IST | Chella
பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்து மூளை  கல்லீரல்  இதயத்தை சமைத்து சாப்பிட்ட மகன்     தூக்குல போடுங்க     நீதிபதிகள் தீர்ப்பு
Advertisement

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மகட்வாலா வாசகத் பகுதியைச் சேர்ந்தவர் எல்லம்மாம் (63). இவரது மகன் சுனில் ராமா (38). இவர், சம்பவத்தன்று தனது தாயிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுக்க எல்லம்மாள் மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகன், தாய் எல்லாம்மாளை கொடூரமான கொலை செய்துள்ளார்.

Advertisement

பின்னர், அவர் தாயின் உடலை வெட்டி, சில பாகங்களை சமைத்து சாப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அரங்கேறியது. இந்த வழக்கில் சுனில் ராமாவை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோலாப்பூர் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு சுனில் ராமாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சுனில் ராமா மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதேபோல மாநில அரசும் அவருக்கு வழங்கிய தண்டனையை உறுதி செய்ய ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சுனில் ராமாவுக்கு கோலாப்பூர் செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இதுதொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "சுனில் ராமாவுக்கு நாங்கள் மரண தண்டனையை உறுதி செய்கிறோம். குற்றவாளி தாயை கொலை மட்டும் செய்யவில்லை. அவரது உடல் உறுப்புகளான மூளை, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை அகற்றி அவற்றை ஒரு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டுள்ளார்.

மேலும், அவரது இதயத்தை சமையல் செய்து சாப்பிட இருந்துள்ளார். ஆகவே, இது நரமாமிச வழக்கு. எனவே இதை அரிதிலும், அரிதான வழக்காக கூற முடியும். இந்த கொடூரமான கொலை சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. நரமாமிசம் சாப்பிட்டவர் திருந்த வாய்ப்பில்லை. இது ஒரு தாயின் மிக கொடூரமான கொலை" என குறிப்பிட்டுள்ளனர்.

Read More : ஒரே நாள் தான்..!! மொத்தமும் போச்சு..!! ரூ.6 லட்சம் கோடியாம்..!! கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை..!!

Tags :
Advertisement