முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ஆணுறுப்பை வெட்டி வீசணும்’..!! ’இப்படி யோசிப்பவன் ஆம்பளையே இல்லை’..!! கொந்தளித்த நடிகை கஸ்தூரி..!!

Can he become a man only if he has a penis?
10:34 AM Aug 20, 2024 IST | Chella
Advertisement

கொல்கத்தாவில் கடந்த வாரம் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது குறித்து பல அரசியல் கட்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும், நடிகை நடிகர்களும் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் தான், நடிகை கஸ்தூரி தன்னுடைய கோபத்தை கொட்டி இருக்கிறார். அவர் பேசுகையில், ”இந்த செய்தி வெளியானதில் இருந்து நெஞ்சத்தில் இருந்து ரத்தம் வருகிற மாதிரி இருக்கிறது. நானும் ஒரு பெண்ணாக இருக்கிறேன். எனக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. ஒரு அம்மாவாக என்னுடைய உடம்பெல்லாம் நடுங்குகிறது. இந்த அளவிற்கு கொடூரம் செய்ய இவர்களுக்கு தைரியம் வருகிறது என்றால் இங்கே கடுமையான தண்டனை இல்லை என்று தானே அர்த்தம்.

ஒரு பெண்ணை இந்த அளவிற்கு சித்ரவதை செய்வதற்கு ஒரு ஆண் யோசிக்கிறான் என்றால் அவன் ஆணே இல்லை. ஆணுறுப்பு இருந்தால் மட்டும் அவன் ஆம்பளையாகி விட முடியுமா? என்ன. அந்த ஆண் ஒரு பெண்ணை தன்னுடைய இச்சைக்காக கொலை செய்து தன்னுடைய இச்சை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று துடிக்கிற அந்த ஆணுறுப்பு அவனுக்கு இருக்கவே கூடாது. இந்த தவறை செய்பவனுக்கு ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும். அதுதான் இந்த பெண்ணிற்கு கிடைக்கும் நீதியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ரேஷன் கடைகளில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்..!! இனி இந்த தவறு நடக்காது..!! பொதுமக்கள் நிம்மதி..!!

Tags :
கொல்கத்தாநடிகை கஸ்தூரிபயிற்சி மருத்துவர்பாலியல் பலாத்காரம்
Advertisement
Next Article