For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Accident | முன்னால் சென்ற லாரியை ஓவர்டேக் செய்த ஆம்னி பேருந்து..!! அடுத்த நொடியே நடந்த சம்பவம்..!! இருவர் பலி..!!

07:42 AM Apr 02, 2024 IST | Chella
accident   முன்னால் சென்ற லாரியை ஓவர்டேக் செய்த ஆம்னி பேருந்து     அடுத்த நொடியே நடந்த சம்பவம்     இருவர் பலி
Advertisement

திருச்சி அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பால் பண்ணை அருகே நடந்த இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணியான மூதாட்டி உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : பாஜகவை எதிர்த்து நிற்க துணிவு இல்லையென்றால் ஏன் அதிமுகவுக்கு தலைமை ஏற்கிறார்..? எடப்பாடி மீது கடும் விமர்சனம்..!!

Advertisement