For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவர் தான்..!! அடித்துச் சொல்லும் பிரபல ஜோதிடர்..!!

Famous astrologer Harikesanallur Venkataraman said that the next Prime Minister will be able to speak Tamil language, which has created a sensation.
02:05 PM Oct 19, 2024 IST | Chella
இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவர் தான்     அடித்துச் சொல்லும் பிரபல ஜோதிடர்
Advertisement

அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவராகத்தான் இருப்பார் என்று பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'ஒளிமயமான எதிர்காலம்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சனிக்கிழமையான இன்று (அக்.19) இந்நிகழ்ச்சியின் ’தெரிஞ்சிக்கலாம் வாங்க’ என்ற பகுதியில் தென்காசியைச் சேர்ந்த எம்.ஜி. ராம்குமார் என்ற நேயர், ”2044ஆம் ஆண்டு தென்காசியைச் சேர்ந்த ஒருவர் தான் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று காசி விசுவநாதரை வேண்டுவதாகக்” குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், ”எதற்காக 2044ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, பெரும்பாலும் அடுத்த பிரதமர் தமிழ் பேசத் தெரிந்தவராகத்தான் இருப்பார் என்று கூறியுள்ளார். அதாவது, இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவராக இருக்கக் கூடிய வாய்ப்புள்ளது என்றும் என்னுடைய கணிப்பு அதுதான் என்றும் ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி வகித்து வருகிறார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : ரிஷப ராசியில் பயணிக்கும் குருபகவான்..!! பணத்தை குவிக்க போகும் 3 ராசிக்காரர்கள்..!! திருமணமும் கைகூடும்..!!

Tags :
Advertisement