முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வங்க கடலில் "டானா" புயல்... தயார் நிலையில் 25 தேசிய பேரிடர் மீட்பு குழு...!

The National Management Committee held a consultation on preparations for the impending storm in the Bay of Bengal.
06:30 AM Oct 22, 2024 IST | Vignesh
Advertisement

வங்காள விரிகுடாவில் வரவிருக்கும் புயலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேசிய மேலாண்மை குழு ஆலோசனை நடத்தியது.

Advertisement

வங்காள விரிகுடாவில் உருவாகவிருக்கும் புயலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் (என்.சி.எம்.சி) கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய துறையின் செயலாளர் ; கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில், உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 2024 அக்டோபர் 23-ம் தேதி காலை கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயலாகவும் தீவிரமடையக்கூடும். அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 24 காலையில் ஒடிசா-மேற்கு வங்க கடற்கரையில் இருந்து வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையக்கூடும். தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகரும் இந்த புயல் 24-ம் தேதி இரவு மற்றும் அக்டோபர் 25 அதிகாலையில் பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) மேற்கு வங்கத்தில் 14 அணிகளையும், ஒடிசாவில் 11 அணிகளையும் நிறுத்துவதற்காக தயார் நிலையில் வைத்துள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாரதீப் மற்றும் ஹால்டியா துறைமுகங்களுக்கு வழக்கமான எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பப்படுகின்றன. உடனடியாக சீரமைக்க மின்துறை அமைச்சகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மூலம் அவசர குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மத்திய முகமைகள் மற்றும் ஒடிசா மற்றும் மேற்குவங்க அரசின் தயார்நிலை நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சரவை செயலாளர், தேவையான அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மற்றும் மத்திய முகமைகள் எடுக்கலாம் என்று அறிவுறுத்தினார். உயிர் இழப்பை பூஜ்ஜியமாக வைத்திருப்பது மற்றும் சொத்து மற்றும் உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும். சேதங்கள் ஏற்பட்டால், அத்தியாவசிய சேவைகளை குறுகிய காலத்தில் மீட்டெடுக்க வேண்டும்.

கடலில் உள்ள மீனவர்கள் திரும்ப அழைக்கப்படுவதையும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் சரியான நேரத்தில் வெளியேற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சரவை செயலாளர் கூறினார். அனைத்து மத்திய ஏஜென்சிகளும் முழு ஆயத்த நிலையில் இருப்பதாகவும், உதவிக்கு தயாராக இருப்பதாகவும் ஒடிசா மற்றும் மேற்குவங்க அரசுக்கு அவர் உறுதியளித்தார். ஆந்திரா, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் கனமழை காரணமாக எந்தவொரு சூழ்நிலையையும் கையாள தயாராக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க, பாதிக்கப்படக்கூடிய பகுதியில் உள்ள அணை தளங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவது அளவீடு செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சரவை செயலாளர் வலியுறுத்தினார்.

Tags :
central govtCycloneodisharainwest bengal
Advertisement
Next Article