For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

mother's name: அனைத்து அரசு ஆவணங்களிலும் தாயார் பெயர் கட்டாயம்!… மே 1முதல் அமல்!... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!

06:20 AM Mar 13, 2024 IST | 1newsnationuser3
mother s name  அனைத்து அரசு ஆவணங்களிலும் தாயார் பெயர் கட்டாயம் … மே 1முதல் அமல்     அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு
Advertisement

mother's name: ஆதார், பான், பிறப்பு சான்றிதழ் என அனைத்து அரசு ஆவணங்களிலும் தாயாரின் பெயரும் இருக்க வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மே 1,2024 முதல் அமலுக்கு வரும்.

Advertisement

ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகளின் பெயர் கட்டாயமாக்கப்பட்ட விதிமுறையானது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் உள்ளது. இருப்பினும் இதுவரை ஆதார் கார்ட், பான் கார்ட், பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசின் ஆவணங்கள் அனைத்திலும் உரிமையாளரின் தந்தை பெயர் மட்டுமே இடம் பெற்று வந்தது. மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2014 மே 1 ஆம் தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகளின் அனைத்து ஆவணங்களிலும் தாயார் பெயர் இருப்பது கட்டாயம் என அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற மே 1ஆம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வர இருப்பதால் ஆதார் அட்டை, பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ், பள்ளி ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் என அனைத்து அரசு ஆவணங்களிலும் தாயார் பெயர் இணைக்க வேண்டும். ஆனாலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு, இந்த புதிய வீதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Readmore:Holiday: செம்ம ஹேப்பி நியூஸ்!… மாணவர்களுக்கு கோடை விடுமுறை!… எத்தனை நாட்கள் தெரியுமா?… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Tags :
Advertisement