முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குடிபோதையில் படுத்திருந்த கூலித்தொழிலாளி..!! நடிகை ரேகா நாயரின் கார் மோதி பலி..!!

A 55-year-old Manjan died on the spot after a car belonging to actress Rekha Nair collided in Chennai.
10:17 AM Aug 28, 2024 IST | Chella
Advertisement

சென்னையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க மஞ்சன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

தமிழ் சினிமாவில் நடிகையாக இருப்பவர் ரேகா நாயர். இவர், இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் தமிழில் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னை மேற்கு ஜாபர்கான் பேட்டை பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் ரேகா நாயரின் காரை ஓட்டுநர் பாண்டி (25) ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது வி எம் பாலகிருஷ்ணா தெருவில் குடிபோதையில் கீழே படுத்திருந்த நபர் மீது கார் ஏறி இறங்கியது. இதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் அப்பகுதியைச் சார்ந்த 55 வயது மதிக்கத்தக்க மஞ்சன் என்பது தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான காரை (Thar) பறிமுதல் செய்து போலீசார் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். உயிரிழந்த மஞ்சன் உடல் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்துருக்காங்க’..!! ‘மலையாள சினிமாவை அப்படி சொல்லாதீங்க’..!! நடிகை ஊர்வசி பரபரப்பு பேட்டி..!!

Tags :
Tharகார் விபத்துரேகா நாயர்
Advertisement
Next Article